தேசிய எஸ்சி - எஸ்டி சி தொழிற்பயிற்சி மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 18ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக எஸ்சி எஸ்டி பிரிவின் தேசிய தொழிற்பயிற்சி மையத்தின் வேலை வாய்ப்பு துறை அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பு
பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 18ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தேசிய தொழிற்பயிற்சி மையத்தில் காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
வேலைவாய்ப்பு உள்ளத் துறைகள்
- வங்கி
- காப்பீடு
- மின் வர்த்தகம்
- கல்வி தகவல்
- தொழில்நுட்பம்
- விளம்பரத்துறை
- பிபிஓ
உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன. மாத ஊதியமாக ரூ 10,000 முதல் 30,000 வரை கிடைக்கும். இந்த முகாமில் 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். அதிக கல்வி தகுதி உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். பட்டியலின மற்றும் பழங்குடியின பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டாலும் இந்த முகாமில் பொதுப் பிரிவினரும் பங்கேற்கலாம். சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் களையும் கொண்டுவரவேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 044-24615112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment