ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்று சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 8 May 2021

ஓய்வூதியதாரர்கள் ஆயுள்சான்று சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

கடலூர் சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 


கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் பதிவுபெற்ற, 60 வயது நிறைவடைந்து ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஆயுள்சான்று சமர்ப்பித்து, ஓய்வூதிய பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும். 


அதன் பின்னரே தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. அதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்கள் 31.7.21 வரை ஆயுள் சான்றை சமர்ப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment