முதலமைச்சர் மாநில
இளைஞர் விருது: ஜூன்
30-க்குள் விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சர்
மாநில இளைஞர் விருதுக்கு, ஜூன் 30-ஆம் தேதிக்
குள் விண்ணப்பிக்கலாம் எனசென்னை, திருவள்ளூர்
மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெள்ளிக்கிழமை
வெளியிட்ட செய்தி: தமிழக அரசின் சார்பில் ஒவ்
வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர
தினத்தன்று, தமிழக முதல்வரால் 3 ஆண்கள் மற்
றும் 3 பெண்களுக்கு மாநில இளைஞர் விருது வழங்
கப்பட்டு வருகிறது. இவ்வாண்டும் இவ்விருது சுதந்
திர தினத்தன்று தமிழக முதல்வரால் வழங்கப்பட
உள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்
களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு ரூ.50,000
ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை
உள்ளடக்கிய முதலமைச்சர் மாநில இளைஞர் விரு
துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதுக்கான தகுதிகள், தமிழ்நாடு விளை
யாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைய தள
மான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில்
தெரிந்து கொள்ளலாம். அதே இணையதளத்தில்
இணைய வழியாக மட்டுமே ஜூன் 30-ஆம் தேதிக்
குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.


No comments:
Post a Comment