கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு, விமான கட்டணத்தில் சலுகை வழங்க, ஏர் கனடா விமான நிறுவனத்துடன், ஐ.டி.பி., எஜுகேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.இதுகுறித்து, ஐ.டி.பி., எஜுகேஷன் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாட்டின் எந்த பகுதியில் இருந்தும், கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு, விமான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளிக்கும் வகையில், ஐ.டி.பி., நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதன்படி, ஐ.டி.பி., நிறுவனம் வழியே பதிவு செய்து, கனடாவுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு, அவர்களது விமான கட்டணத்தில், 15 சதவீதத்தை தள்ளுபடி செய்ய, ஏர் கனடா நிறுவனத்துடன், ஐ.டி.பி., நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஆண்டு, டிச., 31க்குள், வெளிநாடுகளுக்கு படிப்புக்காக செல்லும் மாணவர்கள், ஆக., 31க்குள் டிக்கெட் பதிவு செய்தால், இந்த விமான கட்டண சலுகை வழங்கப்படும்.கொரோனா காலத்திலும், ஐ.டி.பி., நிறுவனம், மாணவர்களின் வசதிக்காக இயங்கி வருகிறது. மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிப்பதற்கு தேவையான அனைத்து விபரங்களையும் அங்கு பெறலாம். மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு, நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். மேலும், வெளிநாட்டு கல்வியாளர்களையும் ஆன்லைனில் தொடர்பு கொண்டு, உரிய வழிகாட்டுதல் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment