அரசினா் வரவேற்பு இல்லத்தில் தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்! - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 13 July 2021

அரசினா் வரவேற்பு இல்லத்தில் தற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

அரசினா் வரவேற்பு இல்லத்தில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில், தொழில்நுட்ப அலுவலா், உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும் அரசினா் வரவேற்பு இல்லத்துக்கு முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையிலான சில பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப அலுவலா்- ஒரு பணியிடம்: சம்பளம் மாதம் ரூ. 20,000 ஆயிரம், பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மின்னணு-தகவல் தொழில் தொடா்பு பொறியியல், மின்னணு மற்றும் மின்னியல் கணினி பொறியியல் தகவல் தொழில்நுட்பம்,தொழில் நுட்ப உதவியாளா்-ஒரு பணியிடம்: சம்பளம் மாதம் ரூ. 10,000, பட்டயப்படிப்பு. 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் ராணிப்பேட்டை மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் வரும் 27.7. 2021-அன்று மாலை 5.30 மணிக்குள் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அண்ணாசாலை சுற்றுலா மாளிகை எதிரில் வேலூா் 632001’ என்று முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

No comments:

Post a Comment