இனி பார்வை இல்லாதவர்களுக்கு ஏ.டி.எம்.,; அஞ்சல்துறை உத்தரவு - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 11 August 2021

இனி பார்வை இல்லாதவர்களுக்கு ஏ.டி.எம்.,; அஞ்சல்துறை உத்தரவு

:பார்வையில்லா வாடிக்கையாளர்களுக்கும் ஏ.டி.எம்., அட்டை வழங்க வேண்டும் என, அஞ்சல் நிலையங்களுக்கு, இந்திய அஞ்சல்துறை உத்தரவிட்டுள்ளது.வங்கி சேவை போன்று, அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கும், ஏ.டி.எம்., கார்டுகள், 2017ம் ஆண்டு முதல் வினியோகிக்கப்படுகிறது. 

இதற்கு வசதியாக, தபால் நிலையங்களில் ஏ.டி.எம்., மையங்களும் செயல்படுகின்றன. எழுத்தறிவில்லாத, கையெழுத்து போடத்தெரியாத வயதானவர்களுக்கு, ஏ.டி.எம்., கார்டு மறுக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம், அவர்களுக்கும் ஏ.டி.எம்., வழங்க வேண்டும் என, அஞ்சல்துறை உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து, பார்வை குறைபாடுடைய வாடிக்கையாளர்களுக்கும், ஏ.டி.எம்., அட்டை வழங்க கோரிக்கை முன்வைத்ததை தொடர்ந்து, எவ்வித பாகுபாடுமின்றி, பார்வை இல்லாத மற்றும் பார்வை திறன் குறைபாடுடைய வாடிக்கையாளர்களுக்கும், அஞ்சல் நிலையங்கள், ஏ.டி.எம்., அட்டை வழங்க, அஞ்சல்நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment