நிர்வாகக் காரணங்களால் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வு நடைபெறும் நாட்கள் தள்ளி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!!! - EDUNTZ

Latest

Search Here!

Monday, 25 October 2021

நிர்வாகக் காரணங்களால் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வு நடைபெறும் நாட்கள் தள்ளி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!!!

ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 600 006, 

பத்திரிகைச் செய்தி 

2017-2018 ஆம் ஆண்டிற்கு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளருக்கான தேர்வு 28.10,2021, 29.10.2021, 30.10.2021 மற்றும் 31.10.2021 தேதிகளில் (காலை மாலை) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் அனுமதிச் சீட்டு (Admit Card) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி Wr.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து 22.10.2021 முதல் பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தற்போது நிர்வாகக் காரணங்களால், தேர்வு நடைபெறும் நாட்கள் தள்ளி வைக்கப்படுகிறது, தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்வர்களுக்குரிய அனுமதிச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in ல் வெளியிடப்படும். நாள் : 25.10.2021 தலைவர்



No comments:

Post a Comment