100 சதவீத தேர்ச்சி இலக்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 11 February 2025

100 சதவீத தேர்ச்சி இலக்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

100 சதவீத தேர்ச்சி இலக்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - 

'கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியர் மீது சிறப்பு கவனம் செலுத்தி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை எட்டச் செய்ய வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்க ளுக்கு அறிவுறுத்தப்பட் டது. திருப்பூர்கலெக்டர்அலு வலக கூட்ட அரங்கில், பள்ளி கல்வித்துறை சார் பில் கலந்தாய்வு கூட்டம், நடந்தது. கலெக்டர் கிறிஸ் துராஜ் தலைமை வகித் தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகு மார், உதவி திட்ட அலுவ லர் அண்ணாதுரை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். 

கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: 

திருப்பூர் மாவட்டத்தில், 163 அரசு பள் ளிகளில், 15,733 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், 12,034 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வும் எழுத உள் ளனர். ஆய்வுக்கூட்டத்தில், கடந்தாண்டு தேர்ச்சி விகி தம், நடப்பு கல்வியாண் டுக்கான காலாண்டு, அரை யாண்டு மற்றும் முதல் திருப்புதல் தேர்வுகளில் டும். தேர்ச்சி விகிதம், கடந் தாண்டு பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி விகிதம் தொடர் பாக, தலைமை ஆசிரியர் கள் மற்றும் பாட ஆசிரி யர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்வுக்கு வராத மாண வர்களை, பள்ளி மேலாண் மைக்குழுவின் துணை யோடு, மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். 

கல்வியில் பின்தங் கிய மாணவர்களை, ஒரு மதிப்பெண் வினாக்கள், முக்கியமான 2, 3 மதிப் பெண் வினாக்களை படிக் கவைக்க வேண்டும். LITTL பகுதிகளை விளக்கி, குறைந்த பகு திகளை தினமும் படிக்க வைக்கவேண்டும். சிறு தேர்வுகள் நடத்தவேண் தினந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண் டும். பெற்றோருடன் கலந்துரையாடி வீட்டிலும் கூடுதல் நேரம் படிக்க அறிவுறுத்தி, நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை பெற் றுத்தரவேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினார். கலெக்டர்


No comments:

Post a Comment