தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் மாணவர்கள் தடையின்றி மேம்பட
‘ஹைப்ரிட் ஸ்கூல் சிஸ்டம்’ முறை அறிமுகம்
லீட் நிறுவனம் தகவல்
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் மாணவர்கள் தடையின்றி மேம்பட ‘ஹைப்ரிட் ஸ்கூல் சிஸ்டம்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக எட்யூடெக் கம்பெனியின் லீட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
3 லட்சம் மாணவர்கள் இலக்கு
தமிழ்நாட்டில் மலிவான தனியார் பள்ளிகளில் (ஏ.பி.எஸ்.) படிக்கும் 2 லட்சம் மாணவர்களுக்கு லீட் சிஸ்டம் உதவிவருகிறது. 2021-க்குள் மேலும் 3 லட்சத்துக்கும் மேல் மாணவர்களை சென்றடைய இலக்குடன் செயல்பட்டு சேவையாற்றி வருகிறது.
MOST READ தினம் ஒரு தகவல் : லிப்ட் வந்தது எப்படி?
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் தடையின்றி மாணவர்கள் மேம்படுவதற்கு எட்யூடெக் கம்பெனியின் லீட் நிறுவனமானது 2021-22 கல்வியாண்டில் ‘ஹைப்ரிட் ஸ்கூல் சிஸ்டம்’ முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கற்றலின் ‘புதிய இயல்பை’ கடைப்பிடிக்க தொடர்ந்து முயற்சிக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும்.
MOST READ யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வை எழுத மறுவாய்ப்பு கோரிய மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
ஆன்-லைன், ஆப்-லைன்...
இந்தியாவில் முதன்முறையாக எட்யூடெக் நிறுவனத்தின் லீட் மட்டும் தான் ஆன்-லைன் மற்றும் ஆப்-லைனில் கற்றலுக்கான செயல்பாடுகளை பள்ளியிலும், வீட்டிலும் மேற்கொள்கிறது. அதுவும் உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதும் கூடுதல் சிறப்பு.
லீட் புதிய கேம்பைன் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. ‘கல் கே லியே கபில்’ என்கிற கேம்பைனானது மிகச்சிறந்தக் கற்றலைக் கொடுப்பது என்கிற கருத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துக் குழந்தைகளும் தடைகளைப் பொருட்படுத்தாமல் உலகத்தரம் வாய்ந்த கற்றல் அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதே லீட் நிறுவனத்தின் நோக்கமாகும்.
வாழ்க்கை தேர்வில் வெற்றி
லீட் மார்க்கெட்டிங் தலைவர் அனுபம் குரானி கூறுகையில், “மறுவரையறை செய்யப்பட்ட தொழில்நுட்பங்கள், உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டங்கள் மற்றும் உயர்ந்த கற்பித்தல் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான புதிய உத்வேகத்தை அளிக்கிறது லீட். மாணவர்கள் ‘வாழ்க்கைத் தேர்வில்’ வெற்றியை உறுதி செய்வதன் மூலம் கல்வியில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்” என்றார்.
No comments:
Post a Comment