தினம் ஒரு தகவல் : லிப்ட் வந்தது எப்படி?
இன்று பல அடுக்குமாடி வீடுகள் வந்துவிட்டன. வெளிநாடுகளில் 100-க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இத்தனை உயரம் கொண்ட கட்டிடங்களின் உச்சத்தை எட்ட உதவியாக இருப்பது ‘லிப்ட்' என்ற நவீனம்தான்.
இந்த லிப்ட் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் பல மாடிக்கட்டிடங்கள் பகல் கனவாகவே போயிருக்கும். உயரமான இடங்களுக்கு செல்ல 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதன் சிந்திக்க தொடங்கி உள்ளான். அப்படி சிந்தித்து சில கருவிகளையும் உருவாக்கிவிட்டான்.
அவை எல்லாம் உபயோகிக்க சிரமமாக இருந்தன. நிறைய ஆட்கள் வேலை செய்ய வேண்டி இருந்தது. இதை எல்லாம் கடந்து இயங்குவதற்கு ஓரளவு சுலபமான இப்போது நடைமுறையில் உள்ள லிப்டை 1852-ம் ஆண்டு கண்டுபிடித்தார், எலீஷா கிரேல்ஸ் ஓட்ஸ் என்பவர்.
இவர் உருவாக்கிய முதல் லிப்ட் நியூயார்க் நகரின் கிரைஸ்ட்டல் பேலசில்தான் பொருத்தப்பட்டது. பாதுகாப்பான ஆள் தூக்கி அமைப்பின் பயனை அப்போதுதான் உணர்ந்தார்கள்.
MOST READ அரசு ஊழியர்களுக்கு ரூ.20 லட்சம் காப்பீடு
பல மாடிக் கட்டிடங்கள் சொந்தமாக வைத்திருப்பவர்கள், உயரமான ஓட்டல் வைத்திருப்பவர்கள் தங்கள் ஓட்டல்களில் லிப்டை பொறுத்த தொடங்கினார்கள்.
லிப்ட் வருவதற்குமுன் ஓட்டல்களில் உயரமான மாடிகளில் உள்ள அறைக்கு வாடகை குறைத்து வசூலித்தார்கள்.
லிப்ட் வந்த பிறகு அந்த முறை மறைந்து விட்டது. ஓட்டல்களில் ஹெல்த் கிளப் இருக்கிறது, ஏ.சி. இருக்கிறது என்று இப்போது விளம்பரப்படுத்துவதுபோல் முன்பு தங்கள் ஓட்டல்களில் லிப்ட் இருப்பதை பெரிதாக விளம்பரப்படுத்தினார்கள். லிப்ட் என்பது பெருமையான விஷயமாக கருதப்பட்டது.
MOST READ CPS - Rate of interest for the Financial Year 2020-2021 - Orders - Issued.
இங்கிலாந்து நாட்டின் 7-வது எட்வர்ட் சக்கரவர்த்தி நியூயார்க் சென்றபோது லிப்டை பார்வையிடுவது, அதில் ஏறி இறங்குவது ஆகியவை அவரது நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக சேர்க்கப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment