தொழில் தொடங்க கடன் உதவி - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 18 May 2021

தொழில் தொடங்க கடன் உதவி


படித்த எத்தனையோ இளைஞர்கள் தங்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் சிர மப்பட்டு வருகின்றனர். பலர் குறைந்த ஊதி யத்தில் கிடைக்கும் வேலையைச் செய்து வரு சின்றனர். தங்களின் திறமையை வெளிப்படுத்தி தொழில் துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு உரிய வசதியைச் செய்து வருகிறது சிட்கோ எனப் படும் மாவட்ட சிறு தொழில் மையம். உயர் கல்வியைக் கற்றவர்களுக்கு மட்டுமின்றி தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவருக்கும் இந் நிறுவனம் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. தமிழக அரசின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக செயல்பட்டு கொண்டிருக்கும் சிட்கோ மூலம் உற்பத்தி தொழிலுக்கு அதிக பட்சம் ரூ. 10 லட்சம், சேவைத் தொழிலுக்கு ரூ. லட்சம் மற்றும் வியாபார தொழிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 


வணிக வங்கிகள், அனைத்து தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ் நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 3- ஆம் வகுப்பு முடித்த வர்கள் தொழில் தொடங்க இந்திறுவனத்தில் விண்ணப்பிக்க முடியும். ஆனால் விண்ணப்ப தாரர் கண்டிப்பாக 18 வயது நிறைவடைந்தவ ராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதுக்குள்ளும், சிறப்பு பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் படை வீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கை யர் உள்ளிட்டோர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தொடர்ந்துப் படிக்க கிளிக் செய்யவும் - CLICK HERE

No comments:

Post a Comment