தீத்தடுப்பு உரிமம் 6 மாதம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Friday, 11 June 2021

தீத்தடுப்பு உரிமம் 6 மாதம் நீட்டிப்பு

தீத்தடுப்பு உரிமம் 6 மாதம் நீட்டிப்பு 

அடுக்குமாடி மற்றும் வணிக கட்டடங்களுக் கான தீத்தடுப்பு உரிமம், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, தீயணைப்பு துறை அறிவித்துள்ளது. நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி, அடுக்கு மாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள், வணிக பயன்பாட்டுக்கான கட்டடங்களில், தீ விபத்துக் களை தடுக்க விதிமுறைகள் உள்ளன. 

இதன்படி, கட்டட உரிமையாளர்கள், தீயணைப்பு துறை யில் விண்ணப்பித்து, தீத்தடுப்பு வசதிகள் உள் ளதை உறுதிபடுத்தி உரிமம் பெற வேண்டும். இவ்வாறு பெறப்படும் உரிமம், ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கது. பின், அந்த கட்டடத்தில், உரிய தீத்தடுப்பு வசதிகள் இருப்பதை உரிமையா ளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். 

இதை தீயணைப் புத்துறை ஏற்று, உரிமத்தை புதுப்பித்து கொடுக்கும். இத்திலையில், ஊரடங்கு மே மாதம் முடிவுக்கு வரும் உரிமங்களை புதுப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மே மாதம் முடிவுக்கு வரும் உரிமங் கள், அடுத்த ஆறு மாதங்கள் வரை செல்லும் தீயணைப்புத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான உத்தரவு, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment