ஜிப்மரில் நீட் தேர்வு அடிப்படையில் செவிலியர் இடங்களுக்கான சேர்க்கை - EDUNTZ

Latest

Search Here!

Friday, 11 June 2021

ஜிப்மரில் நீட் தேர்வு அடிப்படையில் செவிலியர் இடங்களுக்கான சேர்க்கை

ஜிப்மரில் நீட் தேர்வு அடிப்படையில் செவிலியர் இடங்களுக்கான சேர்க்கை 


புதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சிசெவிலியர் படிப்பு மற் றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நீட்தேர்வு மதிப் பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறி வித்தது. புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவாஹர்லால் மருத்துவப் பட்ட மேற்படிப்பு - ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. 

கடந்தாண்டு முதல் அந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதேபோல, செவிலியர் மற்றும் மருத்துவம் சார்ந்த இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு ஜிப்மர் நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் மூலம் சேர்க்கையை நடத்தி வந்தது.இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவப்படிப்புகளுக்கு (BscNursing And Allied Health Science Courses) நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப் படையில் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட தகவல்: 2021- ஆம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்து வப் படிப்புகளுக்கான சேர்க்கை நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். பிஎஸ்சி படிப்புகளுக்கு ஜிப்மரில் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படாது. எனினும், மேற்கண்ட படிப்புகளுக்கான கலந் தாய்வை ஜிப்மர் தனியாக நடத்தும். இதற்காக தனியாக ஜிப்மர் இணை யத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் ஜிப்மர் இணையதளத்தில் (www.jipmer.edu.in) தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment